இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமில் ஹனோய் நகரில் நடந்த ஒரு உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் லிஃப்ட் கொடுக்க முன்வந்ததாக தகவல் கசிந்துள்ளது.
அமெரிக்க அதிபராக இருந்த போது டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு, தனது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் அழைத்து செல்ல விரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு பொருளாதார தடைகள் விதித்த போதிலும், சளைக்காமல், அணு ஆயுத சோதனைகள் மூலம் உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை (Kim Jong Un) முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு முறை சந்தித்து, அணு ஆயுதங்களை கைவிடும் படி வற்புறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2018ஆம் ஆண்டில் சிங்கப்பூரிலும், 2019 ஆண்டு வியட்நாமிலும் சந்தித்து பேசினார். வியட்நாமில் மாநாட்டில் கலந்து கொள்ள, அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ விமானமான Air Force One-ல் ட்ரம்ப் சென்றிருந்த நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனா வழியாக சுமார் 60 மணி நேரம் ரயிலில் பயணம் செய்து வியட்நாமை அடைந்தார்.
கிம் ஜாங் உன் தனது தந்தை வழி நடக்கவே ரயிலில் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிம் ஜாங் உன்னை தனது விமானத்தில் வட கொரியா அழைத்து செல்ல முன்வந்தது, அனைவரையும் திகைக்க வைத்தார். ஆனால் ஏன் இந்த திட்டம் கை விடப்பட்டது என்பது தான் தெரியவில்லை. ரம் விரும்பினாலும், பின் நாட்களில் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவருக்கு பலர் அறிவுரை கூறி இருப்பார்கள் அல்லவா.